செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தாயில்லா சிறுமியிடம் 2 மாதங்களாக மிரட்டி அத்துமீறிய 5 அரக்கர்கள்..!

Mar 27, 2022 06:46:42 AM

செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 7ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான 13வயது சிறுமிக்குத்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.

தாய் வேறு ஒருவருடன் சென்று விட்ட நிலையில் குடிபோதைக்கு அடிமையான தந்தையும் வீட்டிற்கு சரியாக வராததால், மெக்கானிக் வேலை பார்த்து வரும் 15 வயது சகோதரரின் பராமரிப்பில் இருந்த சிறுமி அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தனது சகோதரரின் கூட்டாளியான சந்தோஷ் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த கும்பலுக்கு பயந்து சந்தோஷ் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த பெண்ணின் சகோதரர் பெரியப்பா வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி 3 ந்தேதி வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரது சகோதரரை தாக்குவதற்காக வீடு தேடி வந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் மாணவி தனியாக இருப்பதை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் பிப்ரவரி 8ஆம் தேதி போதையில் வீடு புகுந்த அந்த 5 பேர் கும்பல் சிறுமியிடம் அத்துமீறி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகின்றது. அன்றிலிருந்து தொடர்ந்து மாணவியிடம் கடுமையான அத்துமீறல்களை தொடர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறயினரின் பரிந்துறையின் பேரில் இந்த வழக்கு குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

இதில் தனக்கு அந்த 5 பேர் கொண்ட போதைக்கும்பலால் நிகழ்ந்த அத்துமீறல்களை விரிவாக எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, அந்த மாணவி தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மை என்பது உறுதியானதும், விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் செங்குன்றம் பாலகணேசன் நகரை சேர்ந்த லட்சுமணன், அப்துல், பம்மத்துகுளம் பாபு, நாரவாரி குப்பம் அக்பர், வியாசர்பாடி கௌதம் என ஐந்து பேரை செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் கைது செய்தனர்.இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பலை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.


Advertisement
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement