செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு வயது குழந்தைக்கு மதுவுடன் சோறு ஊட்டி கொன்ற படு பாதகி...! ஐந்து காதல் அம்மணி கைது

Mar 25, 2022 06:46:57 PM

இன்ஸ்டாகிராம் காதலர்களுடன் ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒரு வயது ஆண்குழந்தைக்கு உணவுடன் மது ஊற்றி கொடுத்து கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா . இவரது 3 வது கணவர் கார்த்திக் இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ள நிலையில் , 3 திருமணத்துக்கு பின்னரும் காதலில் பிரேக் இல்லா டவுன்பஸ் போல இரு ந்த கீதா 4 வதாக ஒரு வரை இன்ஸ்டாகிராமிலும், 5 வதாக ஒருவரை தனது ஏரியாவிலும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

மனைவி கீதாவின் நடவடிக்கை பிடிக்காததால் , கார்த்திக் , தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்று அங்கு தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14-ந் தேதி தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தை திடீரென்று மயங்கி விழுந்ததாக கூறி உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார் கீதா.

அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உதகை நகர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த போலீசாருக்கு கீதாவின் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் கீதாவின் விபரீத காதல் தொடர் ஓட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.

கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்து உள்ளது. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த கீதா. 3-வதாக கார்த்திக்கை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கார்த்திக்கை விட்டு பிரிந்த கீதா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த போது மேலும் சிலருடன் விபரீத காதல் மலர்ந்துள்ளது. தன்னை சிங்கிள் என்று கூறி அவர்களுடன் பழகிவந்த கீதாவுக்கு ஒரு வயது குழந்தை வீட்டில் இருப்பது இடையூறாக இருந்துள்ளது. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் காதலர்களுடன் வெளியில் செல்ல இயலாமல் தவித்துள்ளாள்.

இதையடுத்து குழந்தையை சரிவர பராமரிக்காமல் பட்டினி போடுவதை வழக்கமாக்கிய கீதா, குழந்தைக்கு உணவூட்டும் போது காதலனுடன் சேர்ந்து குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மதுவை குழந்தைக்கு வாயில் ஊற்றி விட்டுள்ளார். இதனால் குழந்தைக்கு கடுமையான மூச்சுத்தினறல் ஏற்ப்பட்டு உள்ளது.

குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது போல தொட்டில் துணியோடு சேர்த்து சுவற்றில் மோதவிட்டுள்ளாள். இதனால் மூச்சுத்தினறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் இது கொடூரமான கொலை என்பதையும் பிணக்கூறாய்வு மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையை கொலை செய்த கீதாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாள்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement