செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபர் மகன் காரில் கடத்தல்.. சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று ஆந்திராவில் மடக்கிய போலீசார்

Mar 23, 2022 05:39:31 PM

சென்னை அம்பத்தூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தொழிலதிபர் மகனைக் காரில் கடத்திய கும்பலை போலீசார் ஆந்திராவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பாடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அத்திப்பட்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். செவ்வாய்கிழமை மாலை அலுவலகம் முடித்து காரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை மற்றொரு காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், கத்தி முனையில் அவரை தங்களது காரில் கடத்திச் சென்றது.

சிசிடிவியில் சிக்கிய காரின் பதிவு எண்ணை வைத்து, அது வாடகைக் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அதிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே மடக்கினர்.

ஆதர்ஷ் சுப்பிமணியத்தை மீட்ட போலீசார், அவரை கடத்திச் சென்ற செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன் பிரபு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் செந்தில்குமாரும் சரவணனும் ஒன்றாக ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக நிறுவனத்தை மூடியதும் தெரியவந்தது. அதன் பிறகு தனது பங்குத் தொகை ஒரு கோடி ரூபாயை கேட்டு செந்தில்குமார் சரவணனுடன் தகராறு செய்து வந்ததும் அதன் தொடர்ச்சியாகவே ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கடத்தியதும் தெரியவந்தது.

 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement