செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜெ.மரணம் - எனக்கு எதுவும் தெரியாது : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

Mar 21, 2022 07:18:49 PM

ஜெயலலிதா எதற்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தமக்கு தெரியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 8 முறை ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், முதன்முறையாக ஆஜராகி விளக்கமளித்தார்.

ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது? எந்தந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என எந்த தகவலும் தமக்கு தெரியாது எனக் கூறிய ஓ.பி.எஸ்., ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையே சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் மெட்ரோ திறப்பு விழாவில் தான் அவரை கடைசியாக பார்த்தாகவும், அதற்கு பிறகு பார்க்கவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோயை தவிர்த்து வேறு என்ன உடல் உபாதைகள் இருந்தன என்பதும் தமக்கு தெரியாது என தெரிவித்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே தெரிந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அங்கு காவேரி கூட்டம் நடந்ததாக சொல்லப்படுவது குறித்தும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த கூட்டத்தை பற்றி அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கேட்ட போது, முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு dictate செய்ததாக அவர் கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் விஜயபாஸ்கரிடம் விசாரித்த போது தான் அவருக்கு இதய கோளாறு இருந்ததே தமக்கு தெரியவந்தது எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கூறியது ஏன் என்ற கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது எனவும், துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஆணையம் அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன் எனவும் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளைய தினமும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement