செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராமஜெயம் கொலை சிறை கைதிகளிடம் துப்பு துலக்கும் போலீஸ்..! 5 தனிப்படை பர பர!

Mar 20, 2022 09:49:38 AM

பத்து வருடங்களுக்கு முன்பு  நடந்த, திருச்சி  ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சிறைக்கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ந்தேதி நடைபயிற்சிக்குச் சென்ற போது மர்மக் கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

ராமஜெயத்தின் கைகால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 கால கட்டத்தில் தமிழகத்தை அச்சுறுத்திய பவாரியா கொள்ளைக் கும்பலை பிடித்த ஜாங்கிட் தலைமையிலான தனிப்படையில் முக்கிய பங்கு பகித்தவர் ஜெயக்குமார். வட மாநில சிறைகளுக்குச் சென்று சாதுர்யமாகத் துப்பு துலக்கியதில் ஜெயக்குமார் பங்கு முக்கியமானது.

அந்த அடிப்படையிலேயே ராமஜெயம் கொலை வழக்கை துப்பறியும் புலனாய்வுக்குழு தலைமை அதிகாரியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முதல்கட்டமாக ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்த கையோடு தனிப்படையினர் தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட சிறைகளில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

பெரும்பாலான அரசியல் கொலைகளுக்கு சிறையில் தான் திட்டம் தீட்டப்படுகின்றது என்பதால், முதல் கட்டமாக பல்வேறு கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்புடைய கூலிப்படையினரின் பெயர் விவரங்களை சேகரித்துள்ள தனிப்படையினர் அவர்களின் சரித்திர குற்றப்பதிவேடுகளை ஆய்வு செய்து சிறையில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கூலிப்படையினரின் கடந்த கால கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அந்தந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களின் கூட்டாளிகள் மூலமாக ராமஜெயம் வழக்கில் கொலையாளிகளை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எஸ்.பி ஜெயகுமார் தலைமையில் 3 டி.எஸ்.பிக்கள், 5 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 45 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் சவாலான இந்த வழக்கில் துப்புதுலக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement