செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட ஆண்குழந்தை... காதல் பரிசு கசந்த சோகம்..! தாயிடம் சேர்த்த போலீஸ்

Mar 20, 2022 09:49:13 AM

சேலம் அருகே தண்டவாளத்தில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை, போலீசார் தாயிடம் சேர்த்துள்ளனர். மும்பையில் மலர்ந்த காதலுக்கு கிடைத்த  பரிசு தண்டவாளத்தில் வீசப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரமச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளம் அருகே பிறந்து சில மணி நேரமேயான ஆண்குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையின் அழு குரல் கேட்டு அந்த வழியாக சென்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை வீசியது யார் என்று விசாரித்த போது மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ட்பிரஸ் ரெயிலில் வந்த இரு பெண்கள் இந்த குழந்தையை அங்கு வைத்திச்சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றி உள்ள மருத்துவமனைகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தனியார் மருத்துவ மனை ஒன்றில் 22 வயது இளம் பெண் ஒருவர் தொப்புள் கொடி அகற்றும் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் காதலன் கைவிட்டதால் காதல் பரிசு கசந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த சத்திரபடியை சேர்ந்த அந்த பெண் தனது சகோதரியுடன் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வந்துள்ளார். அங்கு ஒரு இளைஞருடந் மலர்ந்த அத்திமீறிய காதலுக்கு பரிசாக அவர் கர்ப்பமாகி உள்ளார்.

அந்த இளைஞர் கைவிட்டதால் என்ந செய்வது என்று தெரொயாமல் தவித்த அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக சொந்த ஊருக்கு செல்வதற்காக தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சகோதரியுடன் பயணித்துள்ளார்.

ஓடும் ரெயிலில் அந்தப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட சகோதரியின் உதவியுடன், ரெயில் கழிப்பறையில் வைத்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தையுடன் ஊருக்கு சென்றால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேருமே என்று அஞ்சி, சேலம் அடுத்த ஓமலூரில் இறங்கி குழந்தையை தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் பையில் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆண்குழந்தையை அந்தப்பெண்ணிடமே ஒப்படைத்த போலீசார் இது போன்ற செயல்கள் சட்டவிரோதமானது என்று எச்சரித்ததோடு, அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து தாயையும் சேயையும் அவர்களுடன் கூட்டிச்செல்ல அறிவுறுத்தினர்.

காதலிக்கும் போது கட்டுப்பாட்டை மறந்தால் என்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.!


Advertisement
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.. கணக்கில் வராத ரூ.1.14 லட்சம் பறிமுதல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement