செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்... வேளாண்துறைக்கு ரூ.33,007 கோடி ஒதுக்கீடு

Mar 19, 2022 06:29:46 PM

பட்ஜெட்டில் வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு, 33 ஆயிரத்து 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டில் ஒன்பது லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளதாகவும், வரும் ஆண்டில் அத்திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக, 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தக்காளி விலையை சீராக்க, பருவமில்லா காலங்களிலும் அதன் சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், 5 ஆயிரம் ஏக்கரில் இத்திட்டம் 4 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநில அரசு கரும்புக்கு டன்னுக்கு 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கும்.15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 5 ஆயிரத்து 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

10 புதிய உழவர் சந்தைகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் காலையில் காய்கறிகளும் மாலை நேரத்தில் சிறுதானியங்களும் விற்பனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்பங்கள் மூலம் வண்ணக் குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி, கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட 25 கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

அயிரை, கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன்வளர்ப்பு மாற்றும் பாதுகாப்பிற்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். விரால், அயிரை உள்பட நாட்டின் மீன் வகைகளை வளர்க்க உள்நாட்டு மீன் வளர்ப்போருக்கு பயிற்சி தரப்பட உள்ளது. 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement