செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பைக்கில் கிச்சு கிச்சு.. அதிவேக காதல் ஜோடி.. சென்டர் மீடியனில் மோதியது.. காதலன் பலியான சோகம்.!

Mar 19, 2022 09:06:44 AM

பெரம்பலூரில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு காதலியுடன் பேசிக் கொண்டே இருசக்கரவாகனத்தில் சென்ற போது செண்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.

தங்களுக்கு இடையில் காற்றுப்புக கூட இடம் கொடுக்காமல் இரு சக்கரவாகனத்தில் சாலையை கிழித்துக் கொண்டு பறக்கும் இளம் காதல் ஜோடிகளை பலரும் பார்த்திருக்கலாம். ஆபத்தை உணராமல் இவ்வளவு வேகமாக போய் என்ன செய்ய போகின்றனர் ? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும், அப்படி அதிவேகத்தில் சென்ற காதல் ஜோடி ஒன்று விபத்தில் சிக்கிய துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நவீன்குமார். 23 வயதான இவர் பிஎஸ்சி பயோ கேமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீஸ் எழுத்து தேர்வுக்காக தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.

கபடி வீரரான நவீன் குமார் வியாழக்கிழமை அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி விட்டு வருவதாக கூறிவிட்டு தனது பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்

ஆனால் கபடிப்போட்டிக்கு செல்லாமல் தனது காதலியான 19 வயது இளம் பெண்ணை சந்திக்க பெரிய செருவத்தூர் சென்ற நவீன்குமார், காதலியை அழைத்துச்சென்று பெரம்பலூரில் உள்ள கோலிலில் வைத்து மஞ்சள் தாலி கட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அங்கிருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக் குறிச்சி செல்வதற்காக அதிவேகமாக சென்றுள்ளார். திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள் மெய்மறந்து பேசியவாறே சாலையில் அதிவேகமாக பயணித்ததாக கூறப்படுகின்றது. வாலிகண்டபுரத்தை கடந்து தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமம் அருகே சென்றபோது நவீன்குமாரின் பைக் எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நவீன்குமார் தலைகவசம் அணியாததால் கீழே விழுந்த வேகத்தில் தடுப்பு சுவற்றில் மோதி அவரது தலை மற்றும் நெற்றிப்பகுதி பிளந்து பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியனார்.

அவருடைய காதல் மனைவியான அந்த புதுப் பெண்ணோ தூக்கி வீசப்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் சாலையில் கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கபடி விளையாட சென்ற தன் மகன் வெற்றியோடு திரும்பி வருவான் என்று காத்திருந்த நவீன் குமாரின் தாயிடம் , இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் நவீன்குமார் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே சுய நினைவு திரும்பிய பின்னர் அந்த இளம் பெண் தனது சகோதரருடன் வீட்டுக்கு சென்று விட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை நவீன்குமார் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, கவனசிதறலை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்த்து நிதானத்துடன் வாகனத்தை இயக்கினால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.


Advertisement
"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்

Advertisement
Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement