செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தலைநகரை கலக்கும் ‘சாத்தானின் அடிமைகள்’ போதை கும்பல் அட்டகாசம்..! வலிமை காட்டிய போலீஸ்..!

Mar 19, 2022 07:44:07 AM

சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவனின் இரு மகன்களை கடத்திய ரவுடிக்கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப்பிடித்தனர்.

சென்னையில் கஞ்சா, அபின், மெத்த பட்டமைன், கெட்டமைன், எல்.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு விதமான போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து இளைஞர்களின் புத்தியை கெடுப்பதால் போதை என்ற சாத்தானுக்கு அடிமைகளாகி கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போதை பொருள் கடத்தலுக்கு தடுத்து அழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 8-ம் தேதி வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் , வண்ணார பேட்டையில் காதர்மொய்தீன், நாகூர் அனிபா , ஷேக்முகமது வெங்கடரெட்டி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போதை பொருள் கடத்தல் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ மெத்தபட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றியதோடு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திராவில் ரகசியமாக செயல்பட்டு வந்த போதை பொருள் தொழிற்சாலையையும் ஆந்திர போலீசாருடன் சேர்ந்து அழித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பது தெரியவந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவான அவனை போலீசார் தேடினர். இதில் ஜெயினுலாபுதீன் மனைவி அவரது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று மனைவியிடம் விசாரித்தனர்.

அப்போது, தனது கணவர் ஜெய்னுலாப்தீனிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இருக்கும் தகவல் தெரிந்த ரவுடி கும்பல் ஒன்று இரண்டு மகன்களையும் கடத்தி வைத்துக்கொண்டு, 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வருவதாக அவரது மனைவி போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து ஜெய்னுலாப்தீன் மனைவியை வைத்து கடத்தல்காரர்களிடம் பேச வைத்த போலீசார், 20 லட்சம் பணத்துடன் வருவதாக கூற வைத்தனர். டம்மி பண பையுடன் கடத்தல்காரர்கள் வரச்சொன்ன வியாசர்பாடி முல்லை நகர் பகுதிக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். பணத்தை பெற இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

போலீசாரிடம் சிக்கிய மணலி ரஞ்சித், செங்குன்றம் சந்தோஷ் கொடுத்த தகவலின் பேரில், பாலமுருகன் என்பவனை கைது செய்த போலீசார் அவனது கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயினுலாப்தீன் மகன்களான ஜாகிர், அஜித் ஆகிய இருவரையும் மீட்டனர்.

விசாரணையில் தலைமறைவான கொடுங்கையூர் ரவுடி மூவேந்தர் தலைமையிலான கும்பல், சமூகத்தில் சட்டவிரோதமாக பணம் ஈட்டும் நபர்களை கண்டறிந்து அவர்களை மிரட்டியும், அவர்களது குழந்தைகளை கடத்தியும் பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்தது.

ஜெயினுலாப்தீன் சட்டவிரோதமாக போதை பொருள் கடத்துவதை கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்ட மூவேந்தர், அவர் போலீசுக்கு செல்ல மாட்டார் என்பதை அறிந்தே துணிச்சலாக இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட ஜெய்னுலாப்தீன் மகன்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமார் 10 கிலோ எடையுள்ள எஃப்டிரின்(Ephedrine) எனும் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது பல்வேறு போதைப் பொருட்களை பிரித்தெடுக்கும் மூலப் பொருள் எனவும், இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

எஃப்டிரினை வைத்து மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள்களை தயாரித்து மொத்தமாக சப்ளை செய்து வரும் ஜெயினுலாப்தீனுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகிப்பதால் அவனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்க தொடங்கிய போலீசாரிடம் சத்தமின்றி ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் ரவுடி கும்பல் சிக்கி உள்ளது குறிப்பிடதக்கது.




Advertisement
அரசு பள்ளி புத்தக குடோனில் தீவிபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்.. !!
"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி

Advertisement
Posted Sep 29, 2024 in Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது


Advertisement