செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முன்னாள் காதலிக்குத் தொல்லை.. தட்டிக்கேட்ட பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்..!

Mar 14, 2022 10:01:45 PM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேறொருவரை திருமணம் செய்து கொண்ட காதலிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்தவன், அந்த பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த பெத்துகுமார் என்பவனும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் சம்மதம் கிடைக்காத நிலையில், அனிதா வீரசோழன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால், பெத்துகுமார் செல்போன் மூலம் அடிக்கடி அனிதாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் காதலனின் தொந்தரவை வெளியில் சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று நினைத்து அனிதா கணவரிடம் மறைத்துவிட்ட நிலையில், இடையில், வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்திருந்த பாண்டியன், மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த போது, பெத்துகுமார் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

இந்த விஷயத்தை அனிதாவின் சித்தப்பா செந்திலிடம் கூறிய பாண்டியன், பெத்துக்குமாரிடம் எடுத்துச் சொல்லி கண்டிக்குமாறு கூறியிருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது மகன் சூர்யாவை அழைத்துக் கொண்டு பெத்துகுமாரின் வீட்டுக்கு வந்திருக்கிறார் செந்தில்.

அப்போது, பெத்துகுமார், அவனது தாய் விஜயலட்சுமி, தம்பி விஜயகுமார் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, செந்திலிடம் வாக்குவாதம் செய்து, தகராறு செய்திருக்கின்றனர். ஒருவழியாக சண்டை முடிந்து, செந்திலும், அவரது மகன் சூர்யாவும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.

பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டுக்கே வந்து சத்தம் போட்டதால், ஆத்திரம் தாங்காமல் இருந்த பெத்துகுமார் காரை எடுத்துக் கொண்டு செந்திலிடம் வம்பிழுப்பதற்காக சென்றிருக்கிறான்.

பெத்துகுமாருடன் அவனது தாய், தம்பி, தம்பியின் கூட்டாளிகள் மூன்று பேரும் உடன் சென்றனர். காரில் சென்ற அவர்கள் பந்தல்குடி புறவழிச்சாலையில் மகனுடன் பைக்கில் சென்ற செந்தில் மீது காரை விட்டு மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிலைத்தடுமாறி விழுந்த செந்தில் பலத்த அடிபட்டு மகன் கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகன் சூர்யா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சூர்யா அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஏற்றி கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி.மனோகர் ஆய்வு செய்தார்.

 


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement