செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எல்லையில் தடுத்து நிறுத்தினார்கள்.. வானை நோக்கி சுட்டு பயமுறுத்தினர்.. தமிழக மாணவரின் உக்ரைன் அனுபவம்

Mar 07, 2022 07:22:23 AM

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர், அங்கு உக்ரைன் ராணுவம் தங்களை எல்லையில் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகவும், வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியிலும், கடுங்குளிருக்கு மத்தியிலும் மரண பயத்துடன் சிக்கிய தமிழக மாணவர்கள் தாயகத்திற்கு வந்து குடும்பத்தினரையும், சொந்த பந்தத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அந்த பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த பின்னர் துதரகம் மூலம் ருமேனியா எல்லை வழியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக மாணவர் கவுரி சங்கர் கூறியுள்ளார்.

உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேற உக்ரைனியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை, முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்ற அவர், தங்களை உரைனை விட்டு வெளியேற அந்நாட்டு ராணுவம் அனுமதிக்கவில்லை எனவும், அது குறித்து கேட்ட போது கூட உக்ரைன் ராணுவம் தங்களை பயமுறுத்துவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி தடுத்து நிறுத்தி மிரட்டியதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

மைனஸ் டிகிரி கடுங்குளிரில் பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தான் உக்ரைன் ராணுவம் தங்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததாகவும், சுமார் 3ஆயிரம் மாணவர்கள் அங்கேயே எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிர்கதியாக நின்றிருந்ததாக சோகத்தை பகிர்ந்துள்ளார்.

தங்களுக்கு ஒரு பைசா செலவு கூட இல்லாமல் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று தாயகம் அழைத்து வந்திருப்பதாக, உக்ரைனில் 5ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பார்கவி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.

மகனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மாணவர் கௌரிசங்கரின் தந்தை சண்முகம், எஞ்சிய மருத்துவப் படிப்பை இந்தியாவிலேயே படிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement