செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.!

Mar 01, 2022 10:05:26 PM

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன. மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து, முழுக்க முழுக்க சிவனிடம் மனம் லயித்து, இரவு கண் விழித்து நான்கு சாமத்திலும் சிவ வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஸ்படிக பூஜை, கால பூஜைகளைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரத்தெட்டு வலம்புரி சங்குகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் 678 கிலோ சந்தனத்தை பயன்படுத்தி 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை உருவாக்கி, “ஓம் நமச்சிவாயா” என்ற எழுத்து வடிவில் அமைத்து பெண்கள் வழிபட்டனர். வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இந்த லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தழுவிய மகாதேவர் கோவிலில் ஆயிரத்து எட்டு சங்குகளைக் கொண்டும் நெல் மணிகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட சிவபெருமான் - நந்தி திருவுருவத்தை திரளான பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கோயில் முன்பு 108 நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை விழா நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர ராஜ லிங்கத்திற்கு கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முத்தீஸ்வரர் மற்றும் பொம்மி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர். 

மகா சிவராத்திரியையொட்டி திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மகா காளீஸ்வரி ஆலயத்தில் 61அடி உயரம் கொண்ட, கருங்கற்களால் ஆன சிவலிங்கத்தின் லிங்க திருமேனிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஹரஹர மகாதேவா என முழக்கமிட்டனர். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement