செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புள்ளைய மீட்டுக் கொடுத்துடுங்க சார்...! கண்ணீருடன் கலெக்டரின் காலில் விழுந்த தாய்..!

Feb 28, 2022 08:15:36 AM

உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோரின் தவிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தந்துவிடுங்கள் என பெற்றோர் ஒருபுறம் கண்ணீர் வடிக்க, எப்படியாவது தங்களை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என்ற மாணவர்களின் கதறல் வீடியோக்களும் வெளியான வண்ணம் உள்ளன.

திருச்சி பெரிய மிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மாவட்ட ஆட்சியர் சிவராசுவை அணுகிய ஜெயலட்சுமி என்ற பெண், எதிர்பாராதவிதமாக திடீரென அவரது காலில் விழுந்து கதறத் தொடங்கினார்.

தனது மகன் ராஜேஷ் உக்ரைனில் சிக்கியிருக்கிறான் என்றும் உணவு, உறக்கம் இன்றித் தவிக்கும் மகனை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாதுகாப்பாக அவர்கள் வீடு திரும்புவர் என்றும் உறுதியளித்தார்.

 உக்ரைனில் சுமி என்ற பகுதியில் சிக்கியிருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி தாங்கள் பதுங்கியிருக்கும் நிலவறைக்குள் மின்சாரம், தண்ணீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அவதியுறுவதாக ஆடியோ அனுப்பியுள்ள நிலையில், மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.

முக்கியமாக 500 பேருக்கு மேல் தங்கியிருக்கும் அந்த நிலவறைக்குள் போதிய கழிவறை இல்லாமல் தவிப்பதாக அந்த மாணவி ஆடியோவில் தெரிவித்துள்ளார்.

 இதனிடையே உக்ரனின் சாப்போரிசையா என்ற பகுதியில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். தாங்கள் பதுங்கியிருக்கும் நிலவறையிலிருந்து உணவு வாங்குவதற்காக 15 நிமிடங்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கின்றனர் என்றும் ஆனால் உணவும் பணமும் கிடைக்காமல் தவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு வீடியோவில் கார்கீவ் பகுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள், குண்டு சப்தங்களுக்கு இடையே தங்களது நிலையை விவரித்துள்ளனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement