செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சியை காய்ச்சி எடுத்த இளைஞர்கள்

Feb 27, 2022 10:12:24 AM

கரூர் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட, இளைஞரை, வாகனத்தை பறிகொடுத்தவர்கள் ஒன்று கூடி  அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடந்த அக்டோபர் மாதம் 25 ந்தேதி இரவு பறித்துச்சென்று உள்ளனர்.

புகாரின்பேரில் விசாரணையை முன்னெடுத்த திருவெரும்பூர் போலீசார், பறித்துச்செல்லப்பட்ட வாகனத்தை 28ந்தேதி கரூர் மாவட்டம் உள் வீரராக்கியம் கிராமத்தை சார்ந்த பாஸ்கரன் என்பவரது தோட்டத்தில் இருந்து மீட்டனர்.

விசாரணையில் பாஸ்கரன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது ஆக்டிவா வாகனத்தில் வந்த மர்மநபர் பாஸ்கரனிடம் பேச்சுக் கொடுத்தபடி, அவருடைய கேடிஎம் 200சிசி வண்டியை ஓட்டி பார்ப்பதற்கு கேட்டுள்ளான்.

அவனிடம் நீ யார் என்று கேட்டதற்கு கட்டளை பெரியசாமி என்பவரின் மகன் என்று சொல்லி ஆக்டிவா வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு கேடி.எம் வண்டியை ஓட்டிப்பார்ப்பதாக கூறி திருடிச்சென்றது தெரியவந்து.

பின்னர் கேடி.எம் வண்டியை தேடிப் பார்த்ததில் அந்த வண்டியை, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பத்தாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

சினிமா பாணியிலான இந்த தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் காட்டுப்பூச்சி நிஷாந்த் என்பவனை மடக்கி பிடித்த பாஸ்கரனின் மகன்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகின்றது

காட்டுப்பூச்சி நிசாந்தை மரத்துக்கு அடியில் அமரவைத்து ஆளுக்கொரு குச்சியால் அடி வெளுத்தனர். வாகனத்தை திருடி போலீசுக்கு கடுக்கா கொடுத்தவனை மடக்கிப்பிடித்து கஞ்சி காய்ச்சிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

குச்சியாலும், கை, கால்களாலும் தாக்குதலுக்கு உள்ளான நிஷாந்த் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனின் மகன்கள் மற்றும் அவரின் நண்பர்களை வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement