செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மக்களை தேடி மருத்துவம் திட்டம்... இதுவரை 50 லட்சம் பேர் பயன்..

Feb 23, 2022 01:00:13 PM

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 50லட்சம் பேர் பயனடைந்திருக்கும் நிலையில், 50 லட்சமாவது பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று மருந்துப் பொருட்களை வழங்கினார்.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்ற இலக்கை சுகாதாரத்துறை எட்டியுள்ளது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் செயல்படுத்தப்படும் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 21ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கின்றனர். இதற்காக 19 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 640 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அத்தோடு, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 188 புதிய ஆம்புலன்ஸ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படக்கூடிய ஆம்புலன்ஸில்களின் எண்ணிக்கை 1491 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement
கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?
ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..
மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி பின்னர் பாலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்..
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் ..
மகேந்திரா பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்தார்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அகில இந்திய தொழில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் நினைவு மண்டபத்தில் மரியாதை..
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

Advertisement
Posted Oct 24, 2024 in சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement