செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தேர்தலில் வென்றதால் பா.ம.க பெண் கவுன்சிலர் கடத்தல்

Feb 22, 2022 10:09:56 PM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேரூராட்சி தேர்தலில் வென்ற பா.ம.க கவுன்சிலரை சிலர் போலீசார் முன்னிலையில் பகிரங்கமாக காரில் கடத்திச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டுகளில் திமுக கூட்டணி 9 இடங்களையும் , அதிமுக கூட்டணி எட்டு இடங்களையும் கைப்பற்றிய நிலையில் ஒரு இடத்தை பாட்டாளி மக்கள் கட்சி வென்றது.

பேரூராட்சி தலைவரை தேர்தெடுக்க வேண்டுமானால் மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் தேவை என்ற நிலையில் 18வது வார்டு பாமக பெண் வேட்பாளர் அருள் ஜோதி, வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்ததும் மர்ம கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அம்பாசிட்டர் காரில் ஏற்றி கடத்திச்சென்றது

பட்டப்பகலில் போலீசார் முன்னிலையில் நடந்த இந்த கடத்தல் சம்மபவத்தை தடுக்க எவரும் முன்வராத நிலையில் தகவல் அறிந்து திரண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்கள் கட்சியின் கவுன்சிலரை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்ததோடு அங்கிருந்த திமுகவினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அதே போல தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கவுன்சிலர்களை தன்வசபடுத்துவதில், திமுகவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்த திமுகவை சேர்ந்த இரு பிரிவினர், வெற்றியுடன் வெளியே வந்த தங்கள் கட்சியின் கவுன்சிலர்களையும், கூட்டணிகட்சியின் கவுன்சிலர்களையும், தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதால் கைகலப்பு உருவானது

இரு தரப்பினருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் திமுகவினரை கலைந்து போக கேட்டுக் கொண்டனர்.அதனையும் மீறி தங்களுக்கு ஆதரவான கவுன்சிலர்களை காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றனர்.

தலைவர் பதவியை பிடிப்பதற்காக அவர்கள் சினிமா பாணியில் அடித்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement