செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தண்ணீர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை..! இரை தேடி ஊருக்குள் வந்த பரிதாபம்

Feb 17, 2022 09:55:56 AM

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை குட்டி ஒன்று வீட்டிற்கு வெளியே கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலையை நுழைத்து சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. தெரு நாய்களை வேட்டையாட ஊருக்குள் வந்த சிறுத்தை கேனில் சிக்கி நொந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிகின்றது இந்த செய்தி தொகுப்பு..

நள்ளிரவில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் இறைதேடி வந்த சிறுத்தை ஒன்று, தலையில் சிக்கிய தண்ணீர் கேனுடன் சாலைக்கு வந்துள்ளது.

கேனுக்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையை, அந்தவழியாக வாகனத்தில் சென்றவர்கள் செல்போன் கேமராவில் பதிவு செய்தனர்.

காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டதும், அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் , மகாராஷ்டிர மாநில வனத்துறையினர் நடத்திய விசாரணையில் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவில் காணப்படும் இந்த குட்டி சிறுத்தை மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் உதவியுடன் 48 மணி நேரம் போராடி அந்த சிறுத்தை குட்டியை வலைவிரித்து பிடித்த வனத்துறையினர் அந்த பிளாஸ்டிக் கேனை பாதுகாப்பாக அகற்றினர்.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களை வேட்டையாடுவதற்காக இந்த குட்டிச்சிறுத்தை ஊருக்குள் புகுந்திருக்கலாம் என்று கூறும் வனத்துறை அதிகாரிகள், தாகத்திற்காக தண்ணீர் கேனுக்குள் தலையிட்டதால் காட்டுக்குள் செல்ல இயலாமல் ஊருக்குள் சுற்றியதாகவும், அதன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கேனை வெட்டி எடுத்து, மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியை பத்திரமாக காட்டுக்குள் விடுவித்ததாக தெரிவித்தனர்.


Advertisement
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்கு - கொல்கத்தாவுக்கு மாற்றியது சரியே என நீதிபதி உத்தரவு..!
குறுக்கே வந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்று விபத்து.. அரசுப் பேருந்து கார் மீது மோதி இருவர் பலி..!
இருதரப்பு மோதலால் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி வழிபாடு நடத்த வைத்த மாவட்ட ஆட்சியர்..!
பல்வேறு புகார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - சிவகங்கையில் நடந்த அதிரடி நடவடிக்கை..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் குளறுபடி... மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
திருச்சியில் போக்குவரத்துக் காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டிய பெண் கைது
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
திருவள்ளூர் மாவட்டம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலம் மீட்டு தனியார் பள்ளிக்கு சீல்

Advertisement
Posted Sep 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்

Posted Sep 16, 2024 in வீடியோ,Big Stories,

ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!

Posted Sep 14, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?

Posted Sep 14, 2024 in சென்னை,Big Stories,

உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Posted Sep 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிவபெருமான் சாதிபாகுபாடு பார்த்தாரா ? “நந்தன்” சர்ச்சையை பற்றவைத்த சீமான்


Advertisement