செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'நீட் விலக்கு மசோதா சட்டப்பூர்வமானது' சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

Feb 08, 2022 04:14:34 PM

ள்மாறாட்டம், விடைத்தாளில் திருத்தம் என அனைத்து வித முறைகேடுகளும் நீட் தேர்வில் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை, தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர், நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு தடுப்புச் சுவராகவும், தனியார் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும், கல்வி உரிமையை மீட்டெடுக்க சிறப்பு கூட்டம் கூடியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பெற்றுவந்ததாகவும் தற்போது அந்நிலை மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்ய இயற்றப்பட்ட சட்டத்தைப் பின்பற்றியே, நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவதாகவும், நீட் தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெறப்படும் என்றும் சிறப்பு அமர்வில், முதலமைச்சர் கூறினார்.

நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு இல்லை, அது இந்திய மருத்துவ கவுன்சில் உருவாக்கிய தேர்வு என விளக்கமளித்த அவர், நீட் தேர்வு முறை சிலரை கல்லறைக்கும், சிலரை சிறைச்சாலைக்கும் அனுப்பியது என குற்றஞ்சாட்டினார்.

நீட் தேர்வு ரத்து தீர்ப்பை தள்ளுபடி செய்து, 2016ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அத்தேர்வுக்கான பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியும் என்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன ? என கேள்வி எழுப்பிய அவர், மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சட்டமன்ற இறையாண்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தோடு முரண்படும் சட்டத்தை சட்டமன்றம் இயற்றினால், ஜனாதிபதிக்கு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement