செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மணக்கோலத்தில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்..! கவனத்தை ஈர்த்த வேட்புமனு தாக்கல்

Feb 04, 2022 08:52:09 PM

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரில் சிலர் வித்தியாசமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மடிப்பாக்கத்தில் 3 நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் செல்வத்தின் மனைவி சபீனா, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத் தாக்கல் செய்தார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நரிக்குறவ இன பெண் ஒருவர் ஆட்டம், பாட்டத்துடன் வந்து மனு தாக்கல் செய்தார். 

திருச்சி மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிட 80வயது முதியவரான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தார். 

ராமேஸ்வரத்தில் பெண் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், டம்மி நோட்டுகளை மாலையாக அணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

கோவையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ராஜா வேடமணிந்து தள்ளுவண்டியில் வந்து மனுதாக்கல் செய்தார். அதேபோல, பெண் ஒருவர் பாரதமாதா வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதேபோல, 90ஆவது வார்டில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாபிக், தனது மகளுக்கு ஜெயலலிதா வேடமிட்டு எஸ்கார்ட் புடை சூழ அவரை அழைத்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சிறுவர்கள் பொம்மை துப்பாக்கியுடன் பாதுகாப்பு போலீசார் போல் வந்தது கவனத்தை ஈர்த்தது. 

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தவழ்ந்து சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆதரவாளர்களில் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று சிலர் தத்துரூபமாக வேடமணிந்து வந்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண் ஒருவர் தெருக்கூத்து மற்றும் இசை கலைஞர்களோடு ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement