செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு.!

Feb 02, 2022 08:39:32 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது...

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என 649 அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்குப் போட்டியிட இதுவரை 2 ஆயிரத்து 563 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் காஞ்சிபுரம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஐந்து கட்டங்களாக வேட்பாளர்கள் பெயரை அறிவித்து, நேற்று இறுதிப் பட்டியலை வெளியிட்டது. 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டு விட்டன. த.மா.கா. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

தி.முக..- காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது.

பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

நாளை மறுநாள் மனுத்தாக்கல் நிறைவடைய இருப்பதால், மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement