செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிரதமர் மோடி வானொலி உரை.. தமிழகப் பெண்ணுக்குப் பாராட்டு

Jan 30, 2022 03:23:11 PM

அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான பெண்மணி ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்படிச் செய்யப் பரந்த மனம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமர்ஜவான் ஜோதியைத் தேசியப் போர் நினைவுச் சின்னத்துடன் இணைத்த உணர்ச்சிமயமான நேரத்தில், நாட்டுமக்களில் பலரும், தியாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்டார்.

 

மனத்தின் குரல் நிகழ்ச்சிக்காக ஒருகோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் அஞ்சல் அட்டை வழியாகச் செய்தி அனுப்பியதாகவும், 2047ஆம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் எதிர்காலத்திற்கான இளைய தலைமுறையின் பரந்த விரிவான கண்ணோட்டத்தைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகிம் அனுப்பிய அஞ்சலட்டையில் 2047ஆம் ஆண்டில் இந்தியா படைவலிமை மிக்க நாடாகத் திகழ வேண்டும் என்றும், நிலவில் ஆராய்ச்சித் தளத்தை அமைக்க வேண்டும் என்றும் விரும்பியுள்ளதைக் குறிப்பிட்டார். இத்தகைய இளைஞர்களைக் கொண்டுள்ள நாட்டுக்கு முடியாதது என்று எதுவுமில்லை எனத் தெரிவித்தார்.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இளநீர் விற்கும் பெண் தாயம்மாள், கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும், தனது குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதைப் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். இப்படிச் செய்ய பரந்த மனம் வேண்டும் எனக் கூறிப் பாராட்டினார்.

 

கொரோனாவின் புதிய அலைக்கு எதிராக இந்தியா வெற்றிகரமாகப் போராடி வருவதாகவும், நாலரைக் கோடிச் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கை அதற்கு வலிமையூட்டுவதாகத் தெரிவித்தார். கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவது மிகவும் சாதகமான அறிகுறியாகும் என்றும் குறிப்பிட்டார்.


Advertisement
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement