செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கண்ணாமூச்சி ஆடிய படப்பை குணா பக்காவாக சரண்..! போலீசாரிடம் சிக்காமல் கோர்ட்டுக்கு வந்தது எப்படி ?

Jan 26, 2022 06:31:46 AM

தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தான். காஞ்சிபுரம் எஸ்.பியின் தனிப்படை போலீசார் குணாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்கிற படப்பை குணா மீது 8 கொலை, 9 கொலை முயற்சி, ஆள் கடத்தல் உட்பட 48 வழக்குகள் பல காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவுடி படப்பை குணா தனது கூட்டாளிகள் துணையுடன் ஸ்ரீபெரும்புதூர் தொழில் நிறுவனங்களை மிரட்டி இரும்பு கழிவுகளை அகற்றும் ஒப்பதந்தை கைப்பற்றி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகின்றது.

இந்தனிலையில் அதற்கு போட்டியாக வரும் நபர்களை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் போட்டதாக குற்றஞ்சாட்டிய போலீசார் ஏ.எஸ்.பி வெள்ளதுறையை சிறப்பு அதிகாரியாக நியமித்து படப்பை குணாவை தேடிவந்தனர். படப்பை குணா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவான நிலையில் அவரது மனைவி எல்லம்மாள் கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, சிவா என சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், படப்பை குணாவால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயத்துக்காக பயன்படுத்தி வந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஏரி நிலத்தை மீட்டனர். குணாவைத் தேடுதவதில் போலீசாரின் வேகத்தைப் பார்த்த எல்லம்மாள், தனது கணவர் சரணடைய தயாராக இருக்கிறார் என்றும் அவரை என்கவுண்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து,

போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டிய குணா தனது வழக்கறிஞர்கள் புடை சூழ செவ்வாய்கிழமை சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

அவனை வரும் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்ற நடுவர் கிருஷ்ணா உத்தரவிட்டார். பாதுகாப்பு காரணங்கள் கருதி ரவுடி படப்பை குணாவை புழல் சிறையில் அடைக்காமல் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க சிறைத்துறை டிஐஜி பரிந்துரைத்தார்.

கர்ப்பிணிப் பெண்ணை மிரட்டி நில அபகரிப்பு செய்த வழக்கில் சரணடைந்துள்ள குணாவை அடுத்தடுத்து மற்ற வழக்குகளிலும் கைது செய்ய திட்டமிட்டுள்ள போலீசார், பூந்தமல்லி கிளைச் சிறையில் அவனை அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்.பியின் தனிப்படை போலீசார் குணாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement