செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பெயரில் கார் பரிசு.!

Jan 18, 2022 10:17:34 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், பிடிக்கப்படாத ஒரு காளைக்கு பிரதமர் மோடி சார்பில் தங்க காசும் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1020 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் சுற்றுக்கு 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டனர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி நிலையில், அவற்றைப் பிடிக்க முடியாமல் வீரர்கள் பின்வாங்கினர்.ஆக்ரோசத்துடன் களமாடிய ஒரு காளை, யாரையும் நெருங்கவிடாமல், மிரட்டியது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற ஒரு காளை பிடிபட்டாலும் திரும்பி வந்த ஆவேசம் காட்டியது. வாடிவசலுக்குள் போவதும், களத்தில் நின்று அனைவரையும் தெறிக்கவிடுவதுமாய் இருந்த காளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய கரூர் வெள்ளைக் காளை, வாடிவாசலை விட்டு முதலில் வெளியேற மறுத்தாலும், பின்னர், பொறுமையாக வெளியில் வந்து நின்று களமாடி பரிசை வென்றது.இதே போல திருநங்கை கீர்த்தனாவின், ருத்ரன் காளை, ஒரு கண் பார்வையில்லாத நிலையிலும், தனது திறனை வழக்கம்போல் வெளிப்படுத்தி வெற்றி கண்டது.

அதே நேரத்தில் பல காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் மடக்கி பரிசுகளை வென்றனர். கூர் கொம்புகளுடன் களத்தில் இறங்கிய காளைகளை தீரத்துடன் அடக்கி, ஏறு தழுவதில் தமிழர்களே தலை சிறந்தவர்கள் என்பதை வீரர்கள் பலரும் நிரூபித்தனர்.

ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.இதே போல ஒரு காளைக்கு பிரதமர் மோடி சார்பில் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

மாடுகளை பிடித்த அனைத்து வீரர்களுக்கும் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இதே போல பிடிபடாத அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

இது தவிர களத்தில் இறக்கப்பட்ட அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தங்க காசுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்றவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement