செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"நீட்" வேண்டாம்... ஓரணியில் தமிழகம்..!

Jan 08, 2022 02:30:17 PM

நீட் தேர்வு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த, முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, அனைத்து கட்சிகளின் சார்பில் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி, அவரது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்துக்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே ஆளுநர் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் உள்ள சட்டமன்றத்தில், சட்டம் இயற்றி அனுப்பும்போது அதனை ஆளுநர்கள் மதித்து ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் என்றும் கூறினார். 

இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வை கொண்டு வந்து மாநில சுயாட்சியை மத்திய அரசு பறித்துவிட்டதாக தெரிவித்தார். 

முன்னதாக இக்கூட்டத்தில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். நீட் தேர்வு விவகாரத்தில், உணர்ச்சிகரமான அரசியல் செய்ய வேண்டாம் என்று அனைத்துக் கட்சியினரையும், அவர் கேட்டுக் கொண்டார்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement