செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரை.!

Jan 08, 2022 07:37:13 AM

தமிழ்நாட்டில், அம்மா உணவகங்கள் மூடப்படாது என்றும், ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித்துறை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்த அதிமுகவுக்கு நன்றி, என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி சுமார் 48 நிமிடங்கள் பேசினார். முதலமைச்சர் தனது உரையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பால் விலை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், கடந்த ஆட்சியில் முடக்கப்பட்டதாக சில திட்டங்களை பட்டியலிட்டு விமர்சித்த முதலமைச்சர், தமிழகத்தில் அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்றும் உறுதி அளித்தார்.

மேலும், ஜெயலலிதா நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும், அதை பொதுப்பணித்துறை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான தமிழக அரசு துரிதமாக செயல்படுவதாக பாராட்டியதற்கும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்போம் என அறிவித்ததற்கும் அதிமுகவுக்கு நன்றி, என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் நூல் விலையை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement