செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செங்கல்பட்டில் 2 ரவுடிகள் என்கவுன்டர்.!

Jan 07, 2022 07:41:28 PM

செங்கல்பட்டில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசி நிகழ்த்தப்பட்ட இரட்டை படுகொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள், போலீசாரால் அதிரடி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள ரவுடிகளுக்கும், தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவுக்கும் தொடர்பிருக்கிறதா.? என ஏஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

செங்கல்பட்டு காவல்நிலையம் அருகேயுள்ள டீக்கடையில், அப்பு கார்த்திக் என்பவர் நேற்று டீக்குடிக்க வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் தலையை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியது. அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்த மகேஷ்குமார் என்பவரையும், அதே கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த இரட்டை கொலைகளில் தொடர்புடைய மாதவன் என்பவரும், ஜெசிகா என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 குற்றவாளிகள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கியிருந்த 2 குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது வெடிகுண்டு வீசி தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் தப்ப முயன்றனர். இதையடுத்து, தீனா என்கிற தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய 2 ரவுடிகளும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவை, கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை தேடி வரும் நிலையில், செங்கல்பட்டில், 2 ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கின்றனர். என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள ரவுடிகளுக்கும், தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவுக்கும் தொடர்பிருக்கிறதா.? என ஏஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement