செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

Jan 07, 2022 06:32:48 AM

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்தததை அடுத்து சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் முன்னதாகவே அடைக்கப்பட்டன.

சென்னையில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்ணா சாலையில் 100 மீட்டர் இடைவெளியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சென்றவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இரவு பணிக்கு செல்பவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே அனுமதித்தனர்.

தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாரில் முன்கூட்டியே கடைகள் அடைக்கப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி போலீசார் வீட்டிற்கு அனுப்பினர்.

திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் இரவு 10 மணிக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன.

தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் பத்துமணிக்கு முன்னரே வீடுகளுக்கு சென்றனர். அவசிய காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது தொற்று பரவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

இரவு ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணிகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படவும் அனுமதிக்கப்படுகின்றன.

இரவு நேர ஊரடங்கு காரணமாக, எப்போதும் வாகன நெரிசலுடன் பரபரப்பாகக் காணப்படும் சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடின.

சாலைகளில் 100 மீட்டர் இடைவெளியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சென்றவர்கள், உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இரவு பணிக்கு செல்பவர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement