செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கைதானார் "காளிமாதா" பவித்ரா.. உதார் பெண்ணின் பகீர் பின்னணி..!

Jan 06, 2022 09:40:11 AM

கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில், “காளிமாதா” பவித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை காளியின் அவதாரம் என்று கூறி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் தன்னுடைய பக்தர்கள் என்று உதார் விட்டு வந்தவரின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் ஆசி பெற்றதால் தான் முதலமைச்சர் ஆனார், தன்னை வரவேற்கத் தவறியதால்தான் எடப்பாடி பழனிசாமி பதவி இழந்தார், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, நடிகர் சோனு சூட்டெல்லாம் என்கிட்ட ஆசி வாங்கியிருக்காங்க - தன்னைப் பார்க்க வருவோரிடம் "காளிமாதா" பவித்ரா அளந்துவிடும் கதைகள் இவை.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான் தனக்கு பவித்ரா என பெயர் சூட்டியதாகக் கூறும் காளிமாதா பவித்ரா, சிறுவயதிலேயே காளியின் ஆசி பெற்று காளியின் அவதாரமாகவே தன்னை உணர்ந்ததாகக் கூறி வந்தவர். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்ற நிகழ்ச்சியில் தன்னைக் காளியாகத் தேர்ந்தெடுத்து, ‘அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சார்யா’ என்ற பட்டம் கொடுத்தனர் என்றும் பவித்ரா கூறுகிறார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் கரம்பயம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பவித்ரா தற்போது திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருகிறார். இவருக்கென்று தனியாக ஆசிரமமோ, அலுவலகமோ இல்லாத நிலையில், அவ்வப்போது முழு மேக்கப்பில் கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு வெளியூர் கிளம்பிச் சென்று அருளாசி வழங்குவார். இதற்காக இவர் செல்லவிருக்கும் ஊர்களில் இவரது அல்லக்கைகள் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்துவர்.

இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற சாமியார் பவித்ரா மீது போலீசில் புகாரளித்துள்ளார். கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் அமைக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 40 லட்ச ரூபாய் பணமும் 60 சவரன் நகைகளையும் பெற்று பவித்ரா மோசடி செய்ததாக தவயோகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் காளிமாதா பவித்ராவை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

கழுத்து நிறைய நகைகளுடனும் உதட்டில் பளீர் சாயத்துடனும் காட்சியளித்து வந்த ஸ்ரீகாளிமாதா பவித்ரா, போலீஸ் வாகனத்தில் ஏறும்போது தலையில் முக்காடிட்டவாறு அவசர அவசரமாக ஏறிச் சென்றார்.

காவல் நிலையத்தில் விசாரணையின்போது, காளிமாதா அழுது புலம்பிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement