செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பல மணி நேரமாக பெய்த கனமழை.. மீண்டும் தத்தளித்தது சென்னை..

Dec 30, 2021 07:39:11 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவான காற்றின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பிற்பகல் முதல் தொடந்து மழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில வாரங்களாக சென்னையில் பனியும், வறண்ட வானிலையும் நிலவிய இன்று திடீரென கனமழை பெய்தது. 

சென்னையில் பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பகுதிகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில், மழையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

கொட்டித்தீர்த்த தொடர் மழை காரணமாக சிந்தாதிரிபேட்டையில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது.

கனமழை காரணமாக தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தன்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலையில் நிரம்பிய தண்ணீரால் பழுதடைந்த வாகனங்களைத் மக்கள் தள்ளிச் செல்லும் நிலை எற்பட்டது.

தொடர்மழையால் சென்னையில் அதிகளவில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து பாரிமுனை அருகே உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி வழியாக வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

சென்னையில் பிற்பகல் முதல் பெய்த திடீரென கனமழை பெய்ததன் காரணமாக ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்.

கொட்டித்தீர்த்த தொடர் மழை காரணமாக சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உணவகங்கங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

திருவொற்றியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்த நிழற்குடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

பிற்கபல் முதல் பெய்த கன மழையால், தண்ணீர் தேங்கியதை அடுத்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

சென்னை சேத்துப்பட்டு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், மெக்நிக்கல்ஸ் சாலை சிக்னலில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.

சென்னையில் தொடர்ந்து பல மணி நேரமாக பெய்த கனமழையால், வாடகை கார்கள், ஆட்டோக்களின் கட்டணம் திடீரென உயர்ந்தது. பல இடங்களில் வாடகை கார்களும் ஆட்டோக்களும் கிடைக்காத நிலை உருவாகின.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement