தமிழகத்தில் கலைஞர் உணவகம் 500 இடங்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார், இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் உணவு பொது வினியோக துறையின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயால் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி,தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது என்றார்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மாநில அரசு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 300 கோடி ரூபாய் செலவு செய்வதாக அவர் தெரிவித்தார்.