செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆளே இல்லாத கடையில் டீ எதுக்கு? இல்லாத காலேஜில் மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி மோசடி..!

Dec 21, 2021 08:06:08 PM

பட்டியலின மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் சுமார் 17கோடி ரூபாய் அளவுக்கு மெகா முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லாத கல்வி நிறுவனங்களில் 592 பட்டியலின மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

2011-2014 வரையிலான காலகட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் சுமார் 17கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தணிக்கைத்துறை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 52கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு இடத்திலும் எந்த மாதிரி மோசடி நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக இல்லாத கல்வி நிறுவனத்தையே இருப்பதாக போலி ஆவணங்கள் மூலம் உருவாக்கி, 592 பட்டியலின மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி மோசடி செய்தது கணக்கு தணிக்கையில் அம்பலமாகி உள்ளது.

கொளக்காநத்தத்தில் சக்தி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி என்ற பெயரில் கல்லூரி செயல்பட்டு வருவதாகவும், அதில் 157 பட்டியலின மாணவர்கள் படிப்பதாகவும் போலி ஆவணங்களை தயாரித்து, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகம் மூலம் 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வாங்கி முறைகேடு செய்ததாக தணிக்கையில் தெரிய வந்து உள்ளது.

இதேபோல், டி.கொளத்தூரிலும் பாலாஜி பாராமெடிக்கல் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி என்ற பெயரில் கல்லூரி செயல்பட்டு வருவதாகவும், அதில் 134 பட்டியலின மாணவர்கள் பயில்வதாகவும் கணக்கு காட்டி 14லட்சம் பணம் மோசடி செய்ததை தணிக்கைத்துறை கண்டறிந்துள்ளது.

இதுதவிர, படிப்பை பாதியில் விட்டுச் சென்ற மாணவர்கள் பெயரில் கல்வி உதவித் தொகை, ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பலமுறை கல்வி உதவித்தொகை, வெவ்வேறு அடையாள எண்களை கொண்டு, ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் கல்வி நிறுவனத்தின் சொந்த செலவினங்களுக்கு பயன்படுத்தியது, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டுமே பெற தகுதியான உதவித் தொகையை இதர பிரிவு மாணவர்களுக்கு வழங்கியது உள்ளிட்ட முறைகளில் மோசடிகள் நடைபெற்றதாகவும் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement