செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம்-பக்தர்கள் பரவசம்

Dec 21, 2021 06:42:25 AM

தமிழகம் முழுவதும் ஆருத்ரா தரிசன விழாவினை ஓட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் என இரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 11ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா காட்சி முடிந்தது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்து கோவிலுக்குள் சென்றனர்.

இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்ரசபை ரகசிய பிரவேசம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி - குழல்வாய்மொழியம்மை கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் சிவனுக்கும், உற்சவ மூர்த்தியான நடராஜருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வர ர் கோயில், சிவாயம் சிவபுரீஸ்வர ர் கோவில், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வர ர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.

 திருப்பூர் சுகரீஸ்வர சுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற நடராஜர் திருக்கோயில் உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உடையார் கோவிலில் குளத்தின் நடுவே கட்டப்பட்ட கரவந்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

 திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீலஸ்ரீ சட்டி சாமிகள் ஆசிரமத்தில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜர் , அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழிலேயே நடைபெற்றது.

 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement