மதுரை திருமங்கலம் அருகே பாதுகாப்பற்று இருந்த அரசுப்பள்ளி கட்டிடம் மாவட்ட கல்வி அலுவலரின் முன்னிலையில் அகற்றப்பட்டது.
நெல்லை சாப்ட்டர் பள்ளி விபத்தின் எதிரொலியாக, மதுரை மாவட்ட பள்ளிகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் ஆட்சியரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, செங்கப்படை கிராமத்தில் 450 மாணவர்கள் பயிலும், அரசு மேனிலைப்பள்ளியின் மூன்று கட்டிடங்கள், மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஜேசிபி இயந்திரம் மூலம் இன்று அகற்றப்பட்டன.