ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜோலார்பேட்டையிலிருந்து ரேணிக்குண்டா நோக்கி 55 காலி பெட்டிகளுடன் புறப்பட்ட சரக்கு ரயில், சித்தேரி ரயில் நிலையம் அருகே லூப் லைனில் சென்ற போது 14வது பெட்டியில் சக்கரம் ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் விபத்துக்குள்ளானது.
குறைவேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தின் அருகே மாடு இறந்து கிடந்ததால், மாடு சரக்கு ரயிலில் சிக்கியதால் சக்கரம் தடம் புரண்டதா அல்லது வேறு ரயிலில் அடிபட்டு மாடு இறந்ததா என ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.