காஞ்சிபுரம் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
விடுதியில் கொடுத்த உணவை சாப்பிட்டு உடல் உபாதைகளுக்கு ஆளான 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அரசை குற்றம்சாட்டி சாட்டை துரைமுருகன் தனது யூடியூப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சியில் வைத்து சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.