செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓ சொல்றியா பாடலில் ஆண்களை அப்படி குறிப்பிட இதாம்பா காரணம்.. விவேகா விளக்கம்.!

Dec 19, 2021 07:36:34 AM

ஓ சொல்றியா... பாடலில் ஒட்டு மொத்தமாக ஆண்களை குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ள பாடலாசிரியர் விவேகா, ஆண்கள் பாதுகாப்பு சங்கம் யாரிடம் இருந்து ஆண்களை பாதுகாக்க போகிறது ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக கூறி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போர்க்கொடி உயர்த்திய நிலையில், படம் வெளியாகி சமந்தாவின் நடனத்துக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரசிகர்களின் ஆதரவால் திரையரங்குகள் குலுங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் எதிர்ப்பு குறித்து பாடலாசிரியர் விவேகாவிடம் கேள்வி எழுப்பியபோது, ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கின்றது, சரி யாரிடம் இருந்து ஆண்களை பாதுக்காக்க போகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய விவேகா, பெண்களை விமர்சித்து எத்தனையோ பாடல் வந்திருக்கிறது அதனையும் கொண்டாடி இருக்கிறோம் என்றும், பாரில் நடனம் ஆடும் பெண்ணின் பார்வையில் ஆம்பளையை எப்படி பார்க்கிறாள் என்பதற்காக எழுதப்பட்ட பாடல் என்று தெரிவித்தார்.

இந்த பாடலில் குறிப்பிடப்பட்ட வரிகள், எல்லா ஆண்களையும் ஒட்டு மொத்தமாக குறிப்பிட வில்லை என்றும் ஆம்பள புத்தி என்பது ஒரு குறியீடு என்றும் ஆம்பள என்ற தெனாவட்டுடன் வலம் வரும் நபர்களை குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டினார் விவேகா.

ஒரு பக்கம் விவேகா ஓ சொல்றியா... பாடலுக்கு இப்படி விளக்கம் அளித்துக் கொண்டிருக்க நெட்டிசன்கள், அந்த பாடலை தில்லானா மோகனம்பாள் படத்தில் இடம் பெற்ற நலந்தானா பாடலுடன் ரி மிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மீம்கிரியேட்டர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் வட சென்னை படத்தில் ஆண்ட்ரியா சாவு வீட்டில் , மாமா.. மாமா.. என்று கதறி அழும் காட்சியுடன் ஒப்பிட்டு ஒ சொல்றியா பாடலை கலாய்த்து வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement