திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்பி விட்டு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மீஞ்சூர் அடுத்துள்ள தேவதானம் கிராமத்தில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை நடத்துவதற்கான இடமாக பள்ளி வகுப்பறை தேர்ந்தேடுக்கப்பட்டதால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 21 பேரும் வெளியே வராண்டாவில் அமர வைக்கபட்டு பாடம் நடத்தப்பட்டது.
அருகிலேயே ஊராட்சிமன்ற அலுவலகம் இருந்தும், மாணவர்களை வெயிலில் அமரவைத்து இந்த கூட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.