செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.! கண்ணை மறைக்கும் போதை.!

Dec 16, 2021 06:16:16 AM

மதுரையில் விபத்தில் இறந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டவாறும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தவாறும் இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த இளைஞர்கள் இப்படி குத்தாட்டம் போட்டுக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் இருக்கிறது. மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அபி கண்ணன் என்ற அந்த இளைஞன் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். திங்கட்கிழமையன்று கல்லூரி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தனக்கன்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த அபிகண்ணனின் நண்பர்கள், ஆம்புலன்சுக்கு முன்னால் ஊர்வலமாகச் சென்றனர். ஆம்புலன்சின் மேற்கூரையில் ஏறி நின்றும் ஆம்புலன்சின் பக்கவாட்டு ஜன்னலில் தொற்றிக் கொண்டும் விசிலடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறே சென்றுள்ளனர்.

அந்த கும்பலில் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களைக் கொண்டு வீலிங் செய்தவாறும், போலீசார் வைத்திருந்த இரும்புத் தடுப்புகளை தூக்கி வீசி சேதப்படுத்தியவாறும் சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்களது அலப்பறையால், ஆம்புலன்சுக்குப் பின்னால் வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மதுவோடு தற்போது கஞ்சாவும் சேர்ந்துகொண்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகக் வேதனை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், போதை பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement