திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்பட 3ஆயிரம் கோடி ரூபாய்க்கான நல உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
சத்திரம்ஜெயபுரம் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு விழா நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் உதவி, கல்விக்கடன் உள்பட பல்வேறு பயனாளிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.