செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வழி விடலன்னா அடிப்போம்..! அடிச்சா சாவிய பறிப்போம்..! கம்பி என்னும் தம்பி

Dec 14, 2021 08:04:11 PM

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே வழிவிடமறுத்ததால், அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கி சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று திருப்பாச்சூர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்துக்கு பின்னால் வந்த டாடா ஏசி வாகனம் ஒன்று அந்த பேருந்து அருகே சாலையை மறித்து நின்றதோடு அதில் இருந்து இறங்கிய இளைஞன், ஏன் தனது வாகனத்துக்கு வழி விடவில்லை எனக்கூறி பேருந்து ஓட்டுனரான கார்த்திகேயனை தாக்கினான்.

பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் தடுக்க முயன்றதோடு திருப்பி தாக்கியதால், ஆத்திரம் அடைந்து இளைஞன், அவரது கையை பிடித்து இழுத்து சட்டையையும் கிழித்து பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தான்

இதைதொடர்ந்து பேருந்துக்குள் இருந்த பயணிகள் அந்த டாடா ஏஸ் ஓட்டுனரை மடக்கி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், நடத்துனர் ஓடிச்சென்று அந்த வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டார்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த அடாவடி இளைஞன் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் அவன் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரதி என்பது தெரியவந்தது. காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகளை மற்றொரு பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் அனுப்பி வைத்தனர். முந்திச்செல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தால் வம்பிழுத்து கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த 20 வயது தம்பி என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement