விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து நேற்று இரவு கொத்தமங்கலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு, பேருந்து நடத்துனர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி அளித்த புகாரில் நடத்துனர் சிலம்பரசனை கைது செய்த போலீசார், ஓட்டுநர் அருள்செல்வனிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துனரை தட்டிக்கேட்காமல்,சம்பவத்திற்கு ஓட்டுநரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஓட்டுநர் அருள்செல்வன் மற்றும் நடத்துநர் சிலம்பரசனை மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.