பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.