கல்விக் கட்டண பாக்கி காரணமாக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாகவும், இந்த உத்தரவு குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.