தஞ்சாவூரில் கடன் பிரச்சனை எனக் கூறி 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலவெளியைச் சேர்ந்த ராஜா, டீக்கடை நடத்தி வந்ததுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க, பல இடங்களில் கடன் வாங்கியதோடு, வீட்டையும் அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போகவே, வீட்டை விற்பனை செய்ய முடிவெடுத்து, அதற்காக ஒப்பந்தம் போட்டு, முன்பணமும் பெற்றார் என்று கூறப்படுகிறது.
வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதன் காரணமாக வீட்டை விற்ற முழு தொகையும் கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மனமுடைந்த ராஜா - கனகதுர்கா தம்பதி, உறவினருக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்.