தமிழ்நாடு முழுவதும் 50ஆயிரம் இடங்களில் இன்று 13ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், குழந்தைகள் மையம், பள்ளிகள் ஆகியவற்றிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாலை ஐந்து மணி வரை நடைபெறும் இந்த முகாம்களின் பயன்பாட்டுக்கு ஒருகோடியே முப்பது இலட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.