செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

Dec 02, 2021 04:22:45 PM

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் 2ஆவது நாளாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, விமான நிலையங்களில் விரைந்து முடிவுகளை பெறுவதற்கான Rapid பரிசோதனைக்கான கட்டணம் 600 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு தொற்று இல்லாத சூழலில், 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். 8-வது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதில் நெகட்டிவ் என்று அறியப்பட்டாலும், அவர்களது உடல்நிலை மேலும் 7 நாட்கள் கண்காணிக்கப்படும். இப்படியாக 14 நாட்கள் பரிசோதனை கால வளையத்துக்குள் அவர்கள் வைக்கப்படுவார்கள். இதுதவிர்த்து மற்ற நாடுகள், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சுய விபரங்களும் சேகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களுக்கான பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்து கொள்ள ரேபிட் பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், இதற்கான கட்டணம் 4ஆயிரத்தில் இருந்து 3,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுத்து விட்டால் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்ற அவர், முகக்கவசம், தனிநபர் இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.


Advertisement
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement