செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கரூரில் ஆர்.டி.ஓ. ஆய்வாளர் உயிரிழப்பு.. விபத்தை ஏற்படுத்திய வாகனம் சிக்கியது..!

Nov 23, 2021 08:41:47 PM

கரூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ், வேன் மோதி உயிரிழந்த வழக்கில், மோதிவிட்டு நிற்காமல் சென்ற மகிந்திரா மேக்ஸி கேப் வேனை கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்கப் பிரிவில் மோட்டார் வாகன தணிக்கை ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கனகராஜ் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஹிந்திரா மேக்சி கேப் வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.

வேனை நிறுத்தி தணிக்கை செய்வதற்காக எதிரே நின்று சைகை காண்பித்துள்ளார் கனகராஜ். ஆனால், அவர்மீது மோதிய வேன் நிற்காமல் சென்றுவிட்டது. வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்ட கனகராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் மீது மோதிய வேன், டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்களை அழைத்து வரும் வேன் என்பது தெரியவந்த நிலையில், அடுத்தக் கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் வேன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த போலீசார், அதன் பதிவு எண்ணைக் கொண்டு தோகைமலை அடுத்த கழுகூரில் வேனை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிய உரிமையாளர் சுரேஷ்குமாரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Advertisement
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்ய நலத்திட்டம் 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கி உதவி..
மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..
விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement