திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் மருத்துவமனை நோயாளிகள் ஜேசிபி இயந்திரத்தில் பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையை சுற்றிலும் கோவிந்தாபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது குளம் போல் தேங்கி கிடக்கிறது.
இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வெளியே செல்வதற்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.