ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடியை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
தங்கச்சி மடத்தை சேர்ந்த வினித் மற்றும் பில்கேஸ் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் செய்வித்த போலீசார் பெற்றோர்களை வரவழைத்து சமாதானப்படுத்தினர்.
பின்னர் வினித், பில்கேஸ் மற்றும் வினித்தின் பெற்றோர் பேருந்தில் ஊருக்கு சென்ற போது மண்டபம் பேருந்து நிலையத்தில் அவர்கள் மீது பெண்ணின் சகோதர்கள் யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகியோர் கத்தி மற்றும் பிளேடால் தாக்கினர். இதில் காயம் அடைந்த 4பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.