செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வில்லேஜ் சமையல் "டாடி" ஆறுமுகத்தின் குடிகார "சன்"க்கு வலை..!

Nov 23, 2021 06:56:39 AM

யூடியூப்பில் சமையல் மூலம் பிரபலமான டாடி ஆறுமுகத்தின் மகன் ,  மதுக்கூடத்துக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கி, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடியதாக  புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து  தேடி வருகின்றனர். தந்தையின் சமையல் திறமையை வீடியோவாக பதிவிட்டு யூடியூப்பில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் குடிக்கு அடிமையானதால்   நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்ட 60 வயதான ஆறுமுகம் என்பவரது “வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி” என்ற யூடியூப் சேனல், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட பிரபலமான சமையல் சேனல். கிராமத்துப் பின்னணியில் விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ஆறுமுகம்.

தந்தை ஆறுமுகத்துக்குள் இருக்கும் சமையல் கலைஞனை உலகுக்கு அறிமுகப்படுத்தி, இன்று மாதம் பல லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் அவரது மகன் கோபிநாத். “டாடி ஆறுமுகம்” என்ற பெயரில் புதுச்சேரியில் 3 இடங்களில் உணவகம் நடத்தி வருகிறார் கோபிநாத்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி முத்தியால்பேட்டையிலுள்ள AK டார்வின் என்ற "பப்" எனப்படும் மதுக்கூடத்துடன் கூடிய ஹோட்டலுக்குச் சென்றுள்ளார் கோபிநாத். முதல் இரண்டு சுற்று மது உள்ளே போனதும் பப் ஊழியர்களை தகாத சொற்களில் வசைபாடுவதும், தேவையில்லாமல் அழைத்து மிரட்டுவதுமாக கோபிநாத் அலப்பறை செய்ததாகக் கூறுகின்றனர் ஹோட்டல் தரப்பினர்.

இரவு 8 மணிக்கு கோபிநாத் அன் கோ பப்புக்குள் நுழைந்த நிலையில், 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டனர் என்று கூறப்படுகிறது. அதற்கு அங்கு பணியில் இவர்ந்து ஜார்ஜஸ் சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

போதையின் உச்சத்தில் இருந்த கோபிநாத், “நான் யார் தெரியுமா ? டாடி ஆறுமுகத்தின் மகன். எனக்கே சரக்கு இல்லை என்கிறாயா ?” என்று கேட்டவாறு ஜார்ஜஸ் சினாஸை ஆபாச சொற்களால் அர்ச்சனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காலி பீர் பாட்டிலை உடைத்து, ஜார்ஜஸ் சினாஸ் தலையில் அடிக்கப் பாய்ந்ததாகவும் தடுக்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் 3 பேரும் சேர்ந்து ஜார்ஜஸ் சினாசை தாக்கியதோடு, பப்பில் இருந்த சேர், கண்ணாடி டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து போலீசார் வந்தபோது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிநாத்.

வம்பு செய்த கோபிநாத் அன் கோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், பப் ஊழியர் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். அதன்படி ஜார்ஜஸ் சினாஸ் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள கோபிநாத், அவரது நண்பர்கள் ஜெயராம் மற்றும் தாமு ஆகியோரைத் தேடி வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement